பலாங்கொடையில் உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு நட்டஈடு
Sri Lanka
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
By Raghav
பலாங்கொடை (Balangoda) - ரஜவக்க பகுதியில் உயிரிழந்த பாடசாலை மாணவனின் உறவினர்களுக்கு 10 இலட்சம் ரூபாவை நட்டஈடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பலாங்கொடை பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
பலாங்கொடை, ரஜவக்க மகா வித்தியாலயத்தில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒரு மாணவன் உயிரிழந்தார்.
மாணவனின் குடும்பத்திற்கு நட்டஈடு
குறித்த பகுதியில் கடந்த 12 ஆம் திகதி வீசிய காற்றின் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே உயிரிழந்த மாணவனின் உறவினர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
10 இலட்சம் ரூபாயிலிருந்து முதற் கட்டமாக உயிரிழந்து 24 மணித்தியாலத்தில் ஒரு இலட்சம் ரூபாய் வழங்கியதோடு, மீதி 9 இலட்சம் ரூபாய் உயிரிழந்த மாணவனின் பாதுகாவலரிடம் வழங்கப்படுவதாக பலாங்கொடை பிரதேச சபை செயலாளர் லக்ஷிக்கா மீகேல் ஆராச்சி தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
