அரச உத்தியோகத்தர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்த முடிவு!!
தொழில் நிமித்தம் அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவும் வெளிநாடு செல்ல விரும்பும் அரச உத்தியோகத்தர்களுக்கு அனுமதி வழங்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
இதன்படி, ஐந்தாண்டு கால சம்பளமில்லாத விடுமுறை திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றில் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
அரச ஊழியர்களுக்கு பல நன்மைகளை வழங்கும் திட்டம்
"அரச ஊழியர்கள் 5 வருட நிறைவில் சம்பளம் இல்லாமல் விடுமுறை காலத்தை பூர்த்தி செய்ததன் பின்னர் சகல சலுகைகளுடனும் அவர்களின் பதவியுயர்வு மற்றும் தரங்களை மீளப் பெறுவார்கள்.
இதன் மூலம் அரச ஊழியர்கள் வெளிநாட்டிற்கு வேலை வாய்ப்புக்காக செல்வதற்கு ஊக்கம் கிடைக்கும். எனவே, இத்திட்டம் அரச ஊழியர்களுக்கு பல நன்மைகளை வழங்கும்" எனக் குறிப்பிட்டார்.