அரச ஊழியர்களை கடைமைக்கு அழைப்பது தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!
Sri Lanka Economic Crisis
Government Employee
Sri Lanka Fuel Crisis
By Kanna
அரச நிறுவனங்களுக்கு ஊழியர்களை அழைப்பது தொடர்பில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி ஏற்கனவே அரச நிறுவனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களை அழைக்கும் செயற்பாடு மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நெருக்கடி
எரிபொருள் நெருக்கடி காரணமாக அரச நிறுவனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களை அழைக்குமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு முன்னர் உத்தரவு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்பொழுது குறித்த நடைமுறையை நீடித்த உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு சுற்றுநிருபம் வெளியிட்டுள்ளது.
இந்த நடைமுறை மேலும் ஒரு மாதத்திற்கு நடைமுறையில் இருக்கும் எனவும் அமைச்சகம் அறிவித்துள்ளது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 4 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்