கல்வி அமைச்சு வெளியிட்ட எச்சரிக்கை: சிக்கப்போகும் அதிகாரிகள்
Ministry of Education
Sri Lankan Peoples
Sri Lankan Schools
By Dilakshan
சுற்றறிக்கைகளுக்கு புறம்பாக பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்க்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பதில் அரசியல் தலையீடு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு
இந்த நிலையில், பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பதில் சில இடங்களில் முறைகேடுகள் நடப்பதாக முறை்ப்பாடுகள் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இதுபோன்ற முறைகேடுகள் ஏதேனும் இருந்தால், கல்வி அமைச்சின் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு அளிக்க வேண்டும் என்று பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி