எரிசக்தி அமைச்சரின் பதவி விலகல்! புதிய நியமனம் தொடர்பில் வெளியாகிய தகவல்
எரிசக்தி அமைச்சர் பதவியை, அரசாங்கத்தில் ஏற்கனவே உள்ள ஒரு அமைச்சருக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எரிசக்தி அமைச்சர் பதவிக்கு ஒரு புதிய நபரை நியமிப்பதற்குப் பதிலாக, அமைச்சரவை உறுப்பினர் ஒருவரை நியமிக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.
வெள்ளிக்கிழமை (17) எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடி தனது பதவியை விட்டு விலகியதை தொடர்ந்து அமைச்சர் பதவி வெற்றிடமாகியது.
புதிய எரிசக்தி அமைச்சர்
நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆய்வு செய்வதற்காக சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழு நடத்தும் விசாரணைக்கு வழிவகுப்பதற்காகத் தனது பதவி விட்டு விலகுவதாக அமைச்சர் குமார ஜயகோடி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

எரிசக்தி அமைச்சரின் பதவி விலகலை தொடர்ந்து, அரசியலமைப்பின்படி அப்பதவியின் பணிகள் ஜனாதிபதிக்கு மாற்றப்படும், மேலும் எதிர்காலத்தில் புதிய எரிசக்தி அமைச்சரை ஜனாதிபதி நியமிப்பார்.
இந்த நிலையில், எரிசக்தி அமைச்சர் பதவிக்கு, துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |