அதிகாரத்தைக் கைப்பற்ற பாரிய திட்டம்! மனந்திறந்த மகிந்த
இந்த புதிய ஆண்டில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான பாரிய திட்டமொன்று இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியலில் தற்போது மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகவும், அந்த மாற்றங்களுக்கு முகம் கொடுக்க தமது கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தின் பணிகள் இன்று (20) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அரசியல் மாற்றங்கள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் முன்னாள் மற்றும் தற்போதைய உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி, புத்தாண்டு பிறந்திருந்தாலும் கூட மக்கள் இம்முறை புத்தாண்டை முறையாகக் கொண்டாடவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே, அரசியல் மாற்றங்களை இலக்காகக் கொண்டு புதிய ஆண்டில் அதிகாரத்தைக் கைப்பற்றும் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |