இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள்! மத்திய அரசுக்கு அநுர அரசாங்கத்தின் செய்தி

Sri Lankan Tamils M K Stalin Sri Lankan Peoples India Bimal Rathnayake
By Dilakshan Mar 20, 2026 06:54 AM GMT
Report

உள்நாட்டுப் போரின் போது நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டு, தற்போது தமிழ்நாட்டில் அகதிகளாக வசிக்கும் அனைவரையும் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆதரவளிக்க இலங்கை தயாராக உள்ளது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கியதனிப்பட்ட செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.

அந்தச் செய்தி அறிக்கையின்படி, அகதிகளை அரசியல் பிரச்சாரத்திற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு இந்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளை அமைச்சர் பிமல் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் விசேட உரையாற்றும் ஜனாதிபதி அநுர

நாடாளுமன்றில் விசேட உரையாற்றும் ஜனாதிபதி அநுர

மத்திய அரசின் தலையீடு 

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் தொடர்பான பிரச்சினைகளில் மத்திய அரசின் தலையீட்டைக் கோரி, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலிருந்து அகதிகளாகத் திரும்புவோர் குறித்த அரசின் தற்போதைய நிலைப்பாடு பற்றிக் கேட்கப்பட்டபோது அமைச்சர் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள்! மத்திய அரசுக்கு அநுர அரசாங்கத்தின் செய்தி | Govt S Position On Sri Lankan Tamil Refugees India

ஸ்டாலினின் கடிதத்தின்படி, தமிழகம் முழுவதும் முகாம்களுக்கு உள்ளேயும் வெளியேயும் சுமார் 89,000 பேர் வசிக்கின்றனர், அவர்களில் கிட்டத்தட்ட 40% பேர் அங்கேயே பிறந்தவர்கள்.

2009-ஆம் ஆண்டு மே மாதம் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர், ஜனவரி 2009 முதல் ஜூன் 2025 வரையிலான 16 ஆண்டுகளில், 18,542 பேர் தமிழகத்திலிருந்து இலங்கைக்குத் திரும்பியதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் பிமல், திரும்ப விரும்பும் அவர்களை வரவேற்க அரசாங்கம் நிச்சயமாகத் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

இருப்பினும், “அவர்களில் சிலர், இந்தியாவில் பிறந்தவர்கள், அல்லது பல தசாப்தங்களாக அங்கு வாழ்ந்து, படித்து, பணியாற்றியவர்கள், அல்லது ஒரு இந்தியரைத் திருமணம் செய்தவர்கள், இந்தியக் குடியுரிமையைப் பெற முடிவு செய்தால், அந்த நிலைப்பாட்டை நாங்கள் மறுக்க முடியாது. அங்கு குடியுரிமை பெறுவது அவர்களின் யதார்த்தம் மற்றும் உரிமை,” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சரின் வேண்டுகோள்

மேலும், இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகளுக்கு அவர் விடுத்த செய்தியில், “இந்திய அரசாங்கத்திற்கும் தமிழக அரசாங்கத்திற்கும் எனது தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால், தயவுசெய்து தேர்தல்களைச் சுற்றியுள்ள அரசியல் பிரச்சாரத்திற்கு அகதிகளை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டாம். 

இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள்! மத்திய அரசுக்கு அநுர அரசாங்கத்தின் செய்தி | Govt S Position On Sri Lankan Tamil Refugees India

அவர்கள் ஏற்கனவே பெரும் துன்பத்தை அனுபவித்துள்ளனர்; அவர்களின் கோரிக்கையை நாம் கவனத்துடனும் உணர்வுடனும் கையாள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

ஆளும் அநுர குமார திசாநாயக்க அரசாங்கத்தில் ஒரு முக்கிய குரலாக விளங்கும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, 2007-ஆம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களைப் பார்வையிட்டு, முகாம்களில் வசிக்கும் 28,500 நபர்களுக்குக் குடியுரிமை வழங்கும் சட்டத்தை இயற்றுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தார்.

இதேவேளை, மே 2025-ல், செல்லுபடியாகும் கடவுச்சீட்டு இல்லாமல் இலங்கை தீவை விட்டு வெளியேறிய குற்றச்சாட்டின் பேரில், இந்தியாவிலிருந்து திரும்பிய 75 வயது இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் கைது செய்யப்பட்டதை யாழ்ப்பாண முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டியபோது, ​​இவ்விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று அமைச்சர் ரத்நாயக்க கூறியிருந்தைமையும் குறிப்பிடத்தக்கது.

பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள வடக்கு கடற்றொழிலாளர்கள்...

பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள வடக்கு கடற்றொழிலாளர்கள்...

பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள சூயஸ் கால்வாய்! செங்கடலில் விரிவடையும் ஈரான் யுத்தம்

பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள சூயஸ் கால்வாய்! செங்கடலில் விரிவடையும் ஈரான் யுத்தம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025