பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள வடக்கு கடற்றொழிலாளர்கள்...
உள்ளூர் இழுவைமடி மற்றும் எல்லை தாண்டிய இந்திய கடற்றொழிலாளர்களின் ரோலர்களால் தொடர்ந்தும் வடக்கு கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருவதாக வடமாகண கடற்றொழிலாளர்கள் அமைப்பின் பிரதிநிதியான நா.வர்ணகுலசிங்கம் குறிறம் சுமத்தியுள்ளார்.
அவர் நேற்று(20.03.2026) தனது இல்லத்தில் நாடாத்திய ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் சகல தடை செய்யப்பட்ட கடற்றொழில்களும் அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்ற போதும் யாழ்ப்பாணத்தில் நீதியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் அமைச்சு அதிகாரிகள் சட்டவிரோத கடற்றொழில்களை கட்டுப்படுத்துவதில்லை எனவும் கூறியுள்ளார்.
இந்திய இழுவை மடி படகு
மேலும் இந்திய இழுவை மடி படகுகள் உற்பத்தி இடங்களை அழித்து நாசம் செய்கின்ற போதும் அதை விட அதிகமாக தற்போது உள்ளூர் இழுவைமடி படகுகள் மீன் உற்பத்தி இடங்களை அழித்து உறப்பத்தியை இல்லாமல் செய்வதாகவும் குறிப்பட்டுள்ளார்.

தற்போதும் வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு கடல் பகுதிகளில் சட்ட விரோத சுருக்கு வலை தொழில், டைனமெட் , மற்றும் பிற மாவட்ட கடற்றொழிலாளர்கள் வாடி அமைத்து கடல் அட்டை பிடிக்கும் தொழில்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது கடற்றொழிலாளர்கள் மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக்கவும், ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 30 லீட்டர் தொடக்கம் 50 லிட்டர் மண்ணெண்ணெய் தேவைப்படுவதாகவும் ஆனால் ஒரு கிழமைக்கு 20 லிட்டர் மண்ணெண்ணெயை கூட பெற்றுக் கொள்ள முடியாதுள்ளாதகவும், குற்றம் சுமத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |