மலசலகூட குழியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவன்
மலசலகூட குழியில் இருந்து எட்டு வயது சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த துயர சம்பவம் நேற்று (3) மாலை 05.30 மணியளவில் பொகவந்தலாவ - கிவ் கீழ் பிரிவு தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, சிறுவனின் தந்தை வீடமைப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளை சிறுவன் கை கழுவுவதற்காக வீட்டின் பின்புறத்திற்கு சென்ற போது, அங்கு நீர் நிரம்பி காணப்பட்ட குழியில் தவறிவிழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மிதந்த சிறுவனின் பாதணிகள்
தனது மகனை காணவில்லை என சிறுவனின் தந்தை இரண்டு முறைக்கு மேல் கூக்குரல் எழுப்பியும் மகன் வாராததை தொடர்ந்து, தந்தை வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது சிறுவனின் பாதணிகள் இரண்டும் மிதந்து கொண்டு இருந்ததை கண்டுள்ளார்.
அதன்பிறகு சிறுவனை மீட்டெடுத்த டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்ததாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளனார்.
கிவ் தமிழ் வித்தியாலயத்தில் தரம் மூன்றில் கல்வி கற்று வந்த லியோ பெற்ரீக் எலன் சசன் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள தடயவியல் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 7ஆம் நாள் மாலை - திருவிழா
