இணைய வழி மோசடி! சிக்கிய வெளிநாட்டினர் குழு
இணையம் வழியாக மோசடி பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்ட சீன மற்றும் வியட்நாமிய நாட்டினர் அடங்கிய குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் நேற்று(24) செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காலி பிரதி காவல்துறை தலைமை அலுவலகத்தின்படி, பொத்தல காவல்துறை பிரிவின் கீழ் வரும் கொடகந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்த நடவடிக்கையின் போது சந்தேக நபர்களிடமிருந்து ஒரு கணினி, ஒரு மடிக்கணினி மற்றும் 84 கைபேசிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

பூஸ்ஸ இராணுவப் புலனாய்வுப் பிரிவிலிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், காலி காவல்துறை அதிகாரிகள் குழு இந்த சோதனையை நடத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக பொத்தல காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |