துருக்கியில் இஸ்ரேல் தூதரகத்தின் மீது துப்பாக்கிச் சூடு
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு வெளியே இன்று இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு காவலர்கள் காயமடைந்ததாகவும், தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் உயிரிழந்ததாகவும் தாக்குதல்தாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதலில் தாக்குதல் நடத்தியவர்களில் 3 பேர் உயிரிழந்ததாகவும், இரண்டு காவலர்கள் காயமடைந்ததாகவும் தகவல்கள் செய்திகள் வெளியாகி உள்ளன.
துப்பாக்கிச் சூடு சம்பவம் காசா போர் பதற்றத்தின் ஒரு பகுதி
ஆனால் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் மற்றும் குறிப்பாக காசா பகுதியில் நிலவும் போர் பதற்றத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.

காசாமீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு துருக்கி கண்டனம் தெரிவித்து வரும்நிலையில், சமீப காலமாக இருநாடுகளுக்கு இடையிலான தூதரக உறவுகள் மோசமடைந்துள்ளன.
தொடங்கப்பட்டுள்ள விசாரணை
இதனால் இரு நாடுகளும் தங்கள் தூதர்களைத் திரும்பப் பெற்றுக்கொண்ட நிலையில், இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக துருக்கியின் நீதித்துறை அமைச்சர் அகின் குர்லெக் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இஸ்தான்புல்லில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டிலுள்ள பிற வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஈரானில் உச்சக்கட்ட படபடப்பு...! அணுமின் நிலையங்களைச் சுற்றி மனிதச் சங்கிலி - எட்டு மணி வரை ட்ரம்பின் கெடு
images credit - reuters
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
