மித்தெனிய கொடூரக் கொலை: சிக்கிய கொலையாளி!
மித்தெனிய கடவத்த சந்திக்கு அருகில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேரை சுட்டுக் கொலை செய்த துப்பாக்கிதாரி மித்தெனிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், கடந்த மாதம் 18 ஆம் திகதி மகன் மற்றும் மகளுடன் மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையொருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இருந்தனர்.
அதன்போது, தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்துடன், அவரது 9 வயது மகனும் 6 வயது மகளும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தனர்.
விசாரணை
அதனை தொடர்நது, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கொல்லப்பட்டவர், 39 வயதுடைய கஜ்ஜா என்று அழைக்கப்படும் அருண விதானகமகே என்பவர் என அடையாளம் காணப்பட்டார்.
அத்தோடு, அவர் கொல்லப்பட்டபோது, கப்பம் கோருதல் மற்றும் பிற குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருந்ததாக காவல்துறை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், குறித்த நபர் உட்பட அவருது பிள்ளைகளை கொலை செய்த துப்பாக்கிதாரி தப்பி சென்றிருந்த நிலையில், இன்று மித்தெனிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
