போர்நிறுத்த பரிந்துரையை ஏற்றது ஹமாஸ் : நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இஸ்ரேல்
போர் நிறுத்தம் குறித்த ஐநா பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை ஹமாஸ் ஏற்றுக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐநா பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் (Hamas) அறிவித்ததை அடுத்து பணயக்கைதிகளின் பரிமாற்றம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் ஹமாஸ் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது..
இஸ்ரேலை விட்டு விலகாத ஆபத்துக்கள்: எந்த நேரமும் வெடித்துச் சிதறக்கூடிய எரிமலையின் உச்சத்தில் இஸ்ரேல்!
சுகாதாரத்துறை
போரில் இதுவரை 37 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். 75% பேர் குழந்தைகள் என பலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த ஆரம்பித்தன.
காசா யுத்தத்தில் இஸ்ரேல் சார்பு நாடான அமெரிக்காவும் தற்போது போர் நிறுத்தத்தை வலியுறுத்துகிறது.
போர் நிறுத்தம்
இந்நிலையில் ஐநா பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து ஹமாஸ் மூத்த அதிகாரி சமி அபு ஸுஹ்ரி கூறுகையில், "போர்நிறுத்தம், பணயக்கைதிகளை திரும்ப ஒப்படைத்தல் போன்றவற்றை செய்ய தயாராக இருக்கிறோம்.
போர் நிறுத்தம் என்பது இஸ்ரேலுக்கு உண்மையான சோதனையாகும். அவர்கள் போர் நிறுத்தத்திற்கு நிஜமாகவே தயாராக இருக்கிறார்களா என்பது இப்போது தெரிந்துவிடும்" என்று கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர்களின் பிரச்சினையை 1965இல் ஏற்றுக்கொண்ட டட்லி செல்வா ஒப்பந்தம்… 19 மணி நேரம் முன்