இஸ்ரேலின் தாக்குதலில் பலியான ஹமாஸின் முக்கிய தளபதி
2023 அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பங்கேற்று, பீரங்கி படையினரை கடத்துவதில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஹமாஸ் அமைப்பின் தளபதி ஒருவர் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் தெற்கு காசா பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் ஜிஹாத் சமீஹ் மஹ்மூத் இஸ்மாயில் என்பவரே கொல்லப்பட்டதாக IDF கூறியுள்ளது.
இஸ்ரேல் இராணுவம்
அவர் ஹமாஸின் நுக்பா (Nukhba) சிறப்புப் படையில் குழுத் தளபதியாக செயல்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் அடையாளம் கண்டுள்ளது.

2023 அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் ஊடுருவிய இஸ்மாயில், நிரிம் சமூகத்திற்கு அருகே எல்லைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஒரு பீரங்கி படைக் குழுவுடன் நடைபெற்ற மோதலில் பங்கேற்றதாக IDF தெரிவித்துள்ளது.
அந்த படைக் குழுவில், தளபதி ஓமர் மாக்சிம் நியூட்ரா, (21), தளபதி சார்ஜென்ட் ஷகெட் டஹான், (19), ஓட்டுநர் சார்ஜென்ட் நிம்ரோட் கோஹென், (19), துப்பாக்கி இயக்குநர் சார்ஜென்ட் ஓஸ் டேனியல், ஆகியோர் இருந்ததாக கூறப்படுகிறது.
நியூட்ரா மற்றும் டேனியலின் உடல்களை கடத்திச் சென்றதிலும், கோஹெனை உயிருடன் காசாவுக்கு கடத்திச் சென்றதிலும் இஸ்மாயில் பங்கேற்றதாக IDF கூறுகிறது.
இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதல்
டஹான் அந்த மோதலில் கொல்லப்பட்டதுடன், அவரது உடலும் தனியாக காசாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இதன்படி போரின்போது, காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதல்களை நடத்துவதில் இஸ்மாயில் ஈடுபட்டதாக IDF தெரிவித்துள்ளது.
சமீபத்தில், போர் நிறுத்தத்தை “முறையாக மீறும் வகையில்” இஸ்ரேல் இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்களை முன்னெடுப்பதில் அவர் ஈடுபட்டதாகவும், அவர் ஏற்படுத்திய அச்சுறுத்தலை அகற்றுவதற்காக தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் IDF தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |