மகிந்தவின் கோட்டையில் மலசலகூடமின்றி தவிக்கும் 10 ஆயிரம் குடும்பங்கள்
அம்பாந்தோட்டையில் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு மலசல கூட வசதிகள் இல்லை என அரசு சார்பு சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. குறித்த மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சுற்றுச்சூழல் அமைச்சர் மகிந்த அமரவீரவை மேற்கோளிட்ட அந்த ஊடகம் இந்த விவகாரம் நாடாளுமன்றில் விவாதிக்கப்பட்ட போதிலும் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு இதுவரை மலசல கூடங்கள் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
“கிராமத்துடனான உரையாடல்” கூட்டத்தின் போது இந்த விவகாரம் பசில் ராஜபக்சவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாக அமரவீரா தெரிவித்தார்.
மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் கிடைத்தாலும் பெரும்பாலான குடும்பங்களுக்கு மலசலகூடங்கள் அமைக்க பணம் இல்லை.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் சிங்கள தமிழ் புது வருடத்துக்கு முன்னர் அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர், மின்சாரம் மற்றும் மலசலகூட வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்று பசில் ராஜபக்ஷவுடனான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்று அமரவீர குறித்த ஊடகத்திடம் தெரிவித்தார்.