முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோ சடலமாக மீட்பு
அம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவரது சடலம் குறித்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், இவர் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்ள முயச்சி செய்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
குறித்த விடயம் இன்று புதன்கிழமை (02.09.2026) இடம்பெற்றுள்ளது.
எராஜ் பெர்னாண்டோ
உயிரிழக்கும் போது அவருக்கு 57 வயது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர் 2018 ஆம் ஆண்டில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன், இரண்டாவது முறையாக ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் மேயராக தெரிவாகியிருந்தார் என தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 17