பெட்ரோல் லீற்றர் ஒன்றுக்காக 20 ரூபாய்..! அஸ்வெசும பயனாளர்களுக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு
நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நிவாரணங்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
அந்தவகையில், குறைந்த வருமானம் பெறும் அஸ்வெசும பயனாளர்கான 17,500 கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த கொடுப்பனவு ஏப்ரல் மாதம் மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிவாரணம்
அத்துடன், எதிர்வரும் 3 மாதங்களுக்கு எரிபொருள் நிவாரணத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் சிறப்பு சலுகைகளை அறிவிப்பதற்காக நாடாளுமன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, ஓவ்வொரு டீசல் லீற்றருக்கும் 100 ரூபாய் நிவாரணமும் பெட்ரோல் லீற்றர் ஒன்றுக்காக 20 ரூபாய் நிவாரணமும் வழங்கப்படவுள்ளன.
இதற்காக மாதம் ஒன்றுக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 3 மாதங்களுக்கு 600 கோடி ரூபாய் செலவிடப்படும் என ஜனாதிபதி அநுர குமார குமார தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |