தொடர்ந்தும் பி.சி.ஆர் பரிசோதனைகள் வேண்டும் - இல்லையேல் பேராபத்து ஏற்படும்
Corona
Upul Rohana
People
PCR Test
SriLanka
By Chanakyan
பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் மக்கள் சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றாத நிலைமையை காணப்படுகின்றது.
இந்த நிலைமை காரணமாக மிக விரைவில் சாதாரண மக்கள் மத்தியில் ஆங்காங்கே கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண (Upul Rohana) தெரிவித்துளளார்.
நோய் அறிகுறிகள் தென்படாத கொரோனா தொற்றாளர்களை சமூகத்தில் அதிகளவில் அடையாளம் காண முடிந்துள்ளது.
இதனடிப்படையில் மீண்டும் ஒரு முறை கீழ் மட்டத்தில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவது அதிகரிப்பை காட்டுகிறது.
இந்த நிலைமை தொடர்ந்தால், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சிரமமான மட்டத்திற்கு மிகப் பெரிய கொரோனா அலைகள் ஏற்படக் கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.