கொழும்பை அச்சுறுத்தும் மர்ம சடலங்கள்! அடுத்தடுத்து மூன்று உடலங்கள் மீட்பு
கொழும்பில் இன்று மாத்திரம் இதுவைரையில் மூன்று மனித சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்று முற்பகல் வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி கடற்கரையோரங்களில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டன.
இந்நிலையில், தற்போது கொலன்னாவ பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அருகில் உள்ள எண்ணெய் கால்வாயில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெமட்டகொட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும், குறித்த சடலமும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெமட்டகொட காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
கொழும்பு - வெள்ளவத்தை கடலில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் இன்று காலை கரையொதுங்கியுள்ளது.
இச்சடலத்தில் தலை அற்றுக் காணப்பட்டதுடன் உடல் முழுமையாக உருகுலைந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ணொருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதுடன் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வெள்ளவத்தை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.