முல்லைத்தீவில் தொடரும் கனமழை! ஒருவர் உயிரிழப்பு - பல குடும்பங்கள் பாதிப்பு
முல்லைத்தீவில் மாவட்டத்தில் தொடரும் கனமழை மற்றும் அனர்த்தம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 34 குடும்பங்களைச் சேர்ந்த 101 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்ட தகவலின் படி, முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது.
தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் வீடுகள் சிலவற்றிற்குள் வெள்ளம் புகுந்து காணப்படுவதோடு வயல் நிலங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
இதன்காரணமாக பல்வேறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை கடும் காற்று வீசுவதோடு பல்வேறு அனர்த்தங்களுக்கு மக்கள் முகம் கொடுத்து வருகின்றனர்.
அனர்த்தம் காரணமாக மன்னாகண்டல் பகுதியில் மரணம் ஒன்று பதிவாகியுள்ளதுடன் 34 குடும்பங்களைச் சேர்ந்த 101 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 11 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்