நாட்டில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய, சபரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும், அனுராதபுரம் மாவட்டத்திலும் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, கிழக்கு கரையோரப் பிராந்தியங்களில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கங்கள்
சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களின் சில இடங்களிலும் மன்னார், வவுனியா, அனுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கடல் பிராந்தியங்களைப் பொறுத்தமட்டில், திருகோணமலை தொடக்கம் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான பகுதிகளில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.
[
]கடல் பிராந்தியங்கள்
கடல் பிராந்தியங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 20 முதல் 30 km வேகத்தில் தென்கிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து வீசக்கூடும்.
நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
கடற்றொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வானிலை மாற்றங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |