119 அவசர இலக்கத்திற்கு தவறான தகவல் கொடுத்த நபர்: விதிக்கப்பட்ட கடூழிய தண்டனை
காவல்துறை அவசர இலக்கமான 119க்கு தவறான தகவல்களுடன் அழைப்பு விடுத்த நபருக்கு 5 வருட இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரை இன்று (03) ஹட்டன் (Hatton) நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே மாவட்ட நீதிபதி எம்.பாரூக்தீன் (M. Barukhdeen) இந்த உத்தரவை வழங்கினார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 06 ஆம் திகதி, காவல்துறை அவசர இலக்கமான 119 க்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சந்தேகநபர் கினிகத்தேன காவல்துறை நிலைய அதிகாரிகள் மது விருந்து நடத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறை
அந்தத் தகவலின் அடிப்படையில் ஹட்டன் உதவிப் காவல்துறை அத்தியட்சகர் கினிகத்தேனை காவல்துறை நிலையத்திற்குச் சென்று அவசரமாகப் பரிசோதித்தபோது அது தொடர்பான தகவல்கள் போலியானது எனத் தெரியவந்துள்ளது.
இதன்படி, சந்தேகத்திற்கிடமான அழைப்பை விடுத்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு, சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருக்கு இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறை உத்தியோகத்தருக்கு 10,000 ரூபாவை வழங்குமாறு சந்தேகநபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை !](https://cdn.ibcstack.com/article/4a541f45-4b6b-46cc-8bfc-da43b80fd749/24-6682dbaba3ee0-md.webp)
இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை ! 3 நாட்கள் முன்
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-sm.webp)