பதிலடி ஆரம்பம்...! இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஏவுகணைத் தாக்குதல்
இஸ்ரேலினால் முன்னெடுக்கப்படும் போர் நிறுத்த மீறல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், வடக்கு இஸ்ரேலின் மனாரா குடியிருப்புகள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதற்குப் பதிலடியாக, இன்று (09) அதிகாலை மனாராவில் உள்ள இஸ்ரேலியக் குடியேற்றப் பகுதியை ராக்கெட்டுகள் கொண்டு தாக்கியதாக அறிக்கையில் ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அவ்வமைப்பு விடுத்துள்ள டெலிகிராம் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: "எமது நாட்டிற்கும் எமது மக்களுக்கும் எதிராக முன்னெடுக்கப்படும் இஸ்ரேலிய - அமெரிக்க ஆக்கிரமிப்புகள் நிறுத்தப்படும் வரை இவ்வாறான பதிலடித் தாக்குதல்கள் தொடரும் என்றுள்ளது.
ஒப்பந்தத்தில் இணைக்கப்படவில்லை
இதேவேளை, லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்றை வானிலேயே அழித்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஹிஸ்புல்லா அமைப்பின் செயற்பாடுகள் காரணமாக லெபனான் உள்வாங்கப்படவில்லை எனவும், எனினும் லெபனான் விவகாரம் பின்னர் கவனிக்கப்படும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பின் நடவடிக்கைகள் காரணமாகவே, அந்த நாடு தற்போதைய ஒப்பந்தத்தில் இணைக்கப்படவில்லை என ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், லெபனான் தற்போது ஒப்பந்தத்தில் இல்லாவிட்டாலும், அந்த நாட்டின் நிலைமை குறித்து எதிர்காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |