யாழ். வட்டுக்கோட்டையில் தூணை மோதித் தள்ளிய வாகனம்!
யாழ்ப்பாணத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வாகனம் ஒன்று வீதியை விட்டு வெளியேறி தூண் மற்றும் வேலி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
வட்டுக்கோட்டை - மாவடி சந்தி பகுதியில் இன்றைய தினம் (17) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருகையில், “மூளாய் பக்கத்தில் இருந்து வந்த குறித்த ஹயஸ் வாகனம் மாவடி சந்தி ஊடாக சித்தங்கேணி நோக்கி பயணிப்பதற்கு திரும்பியுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
இதன்போது கட்டுப்படுத்த முடியாத வேகம் காரணமாக சித்தங்கேணி பக்கம் திரும்பிய வாகனம் வலது பக்கத்துக்கு மாறி வீதியோரத்தில் இருந்த தூண் மற்றும் வேலி மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த விபத்தில் உயிர் சேதங்கள் எவையும் ஏற்படாவிட்டாலும் தூண், வேலி மற்றும் ஹயஸ் வாகனம் என்பன கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.
இந்த விபத்து சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |