மற்றுமொரு மக்கள் எழுச்சிக்கு வழிவகுக்கும் ரணில் - பகிரங்க எச்சரிக்கை

Maithripala Sirisena Ranil Wickremesinghe Sri Lanka Anti-Govt Protest
By Vanan Sep 26, 2022 04:00 PM GMT
Report

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட அதியுயர் பாதுகாப்பு வலய பிரகடனமானது, மற்றுமொரு மக்கள் எழுச்சிக்கே வழி வகுக்கும் என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.

அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதை விடுத்து அதற்கு நேர் எதிரான செயற்பாடுகளையே அரசாங்கம் மேற்கொள்வதாக கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முற்போக்கான கூட்டணி அமைப்பு

மற்றுமொரு மக்கள் எழுச்சிக்கு வழிவகுக்கும் ரணில் - பகிரங்க எச்சரிக்கை | High Security Order Ranil Popular Uprising

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “பண்டாரநாயக்கவும் அவரது துணைவியாரும் முற்போக்கான கட்சிகளை ஒன்றிணைத்தே அரசாங்கத்தை அமைத்தனர். அந்தக் கொள்கையே எமக்குள்ளும் இருக்கின்றது. ஆகவே முற்போக்கான கட்சிகளை இணைத்துக்கொண்டு எதிர்காலத்தில் கூட்டணியொன்றை அமைத்து மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசாங்கத்தை உருவாக்க எதிர்பார்க்கின்றோம்.

அதியுயர் பாதுகாப்பு வலயத்தை ஏன் அமைத்தீர்கள் என அதனை உருவாக்கியவர்களிடமே கேட்கவேண்டும். இது சிறந்த விடயம் அல்ல. இவ்வாறான விடயங்களை செய்யச் செய்ய, மக்களின் எழுச்சியே அதிகரிக்கும்.

ஆகவே மக்களின் நெருக்கடி நிலைமையை இல்லாது செய்வதுடன், இதுபோன்ற தீர்மானங்களை மேற்கொள்ளும் போது, மக்கள் மேலும் அரச விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள். மக்களுக்கு இருக்கும் பாரிய நெருக்கடி நிலைமையுடன் இன்று மக்கள் எவ்வாறு வாழ்கின்றார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

உங்களுக்கும் எனக்கும் எம் அனைவருக்கும் பொருளாதார நெருக்கடியின் பிரதி பலனை உணர முடிந்துள்ளது.

அவ்வாறான நிலைமையில் மக்களை அமைதிப்படுத்தி, அவர்களுக்கு விடயங்களை தெளிவுபடுத்தி, அவர்களுக்கு சரியான மார்க்கத்தை காண்பித்து, அரசாங்கத்தின் பொருளாதார வேலைத் திட்டங்கள் இவைதான் என தெளிவுபடுத்தி, அரச அதிகாரிகளை அது தொடர்பில் தெரியப்படுத்தும் வேலைத்திட்டங்களையே முன்னெடுக்க வேண்டும். ஆனால், அதற்கு நேர் எதிரான செயற்பாடுகளே இடம்பெறுகின்றன.

தேசிய சபையின் கருத்தாக்கம்

மற்றுமொரு மக்கள் எழுச்சிக்கு வழிவகுக்கும் ரணில் - பகிரங்க எச்சரிக்கை | High Security Order Ranil Popular Uprising

தற்போது உள்ளதைப் போன்ற தேசிய சபையை நாம் எதிர்பார்க்கவில்லை. அனைத்துக் கட்சி அரசாங்கத்தை உருவாக்கும் வகையில் முதலில் தேசிய சபையை உருவாக்கி, அந்த தேசிய சபைக்கு, அதிபருடன் கலந்துரையாடி, பிரதமர் ஒருவரை நியமித்தல். அதன்பின்னர் தேசிய சபையின் கருத்தாக்கத்திற்கு அமைய அதிபரும் பிரதமரும் கலந்துரையாடி, 20 இற்கும் குறைவான அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பதாகும்.

தேசிய சபை உருவாக்கத்தின் பின்னரான செயற்பாடுகளை முதலிலேயே செய்துவிட்டு தேசிய சபையை இறுதியாக உருவாக்கியுள்ளனர். அவ்வாறு இருக்கும் போது அதில் எவ்வாறு இணைவது.

மக்களின் நெருக்கடி நிலைமையை தணிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின், அதற்கு ஆதரவு வழங்க முடியும்” என கேள்வி எழுப்பியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025