பங்களாதேஷில் மீண்டும் வெடித்தது போராட்டம் : வீதிக்கு இறங்கிய இந்துக்கள்

Bangladesh
By Sumithiran Aug 11, 2024 01:44 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

பங்களாதேஷின்(bangladesh) சிறுபான்மை இந்து சமூகம், மாணவர் இயக்கங்கள் என்ற போர்வையில் தங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

 7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் திரண்டிருந்த போராட்டத்தால் தலைநகர் டாக்கா உட்பட பல பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

காலாவதியான வேலை ஒதுக்கீட்டு முறையை மீண்டும் அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சியுடன் பங்களாதேஷில் மாணவர் போராட்டங்கள் வெடித்தது.

அரசாங்கத்திற்கு எதிராக மாறிய போராட்டங்கள்

போராட்டங்கள் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறை காரணமாக, போராட்டங்கள் அரசாங்கத்திற்கு எதிராக மாறியது, இது பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இழப்பதில் முடிந்தது.

பங்களாதேஷில் மீண்டும் வெடித்தது போராட்டம் : வீதிக்கு இறங்கிய இந்துக்கள் | Hindu Community Of Bangladesh Has Started Protest

பின்னர் அவர் நாட்டை விட்டு வெளியேறினார், மேலும் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற முஹம்மது யூனுஸ் தலைமையிலான ஒரு காபந்து அரசாங்கம் மாணவர் ஆர்வலர்களின் தலையீட்டுடன் நியமிக்கப்பட்டது.

இருபது முதல் முப்பத்தேழு வயது வரையிலான மாணவர் இயக்கத்தின் இரண்டு தலைவர்கள் இடைக்கால அரசில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கண்டியில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளை மேம்படுத்துவதற்கு திட்டம் : பாரத் அருள்சாமி அறிவிப்பு

கண்டியில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளை மேம்படுத்துவதற்கு திட்டம் : பாரத் அருள்சாமி அறிவிப்பு

 நாட்டின் நாடாளுமன்றத்தைக் கூட கைப்பற்றிய போராட்டக்காரர்கள் இப்போது நாட்டின் விவகாரங்களைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

பதவி விலக வேண்டும்

தலைமை நீதிபதி உட்பட அனைத்து நீதிபதிகளும் ஒரு மணி நேரத்திற்குள் பதவி விலக வேண்டும் என்று கோரி மாணவர் ஆர்வலர்கள் நேற்று(10) நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.

பங்களாதேஷில் மீண்டும் வெடித்தது போராட்டம் : வீதிக்கு இறங்கிய இந்துக்கள் | Hindu Community Of Bangladesh Has Started Protest

 அங்கு, முன்னாள் பிரதமருக்கு எதிராக பாரபட்சமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன், மற்ற 5 உச்ச நீதிமன்ற நீதிபதிகளுடன் உடனடியாக தனது பதவியிலிருந்து விலகினார்.

ஏமாற்றுக்காரர்களின் தலைவரே ரணில்: விமர்சித்துள்ள தமிழ் எம்.பி

ஏமாற்றுக்காரர்களின் தலைவரே ரணில்: விமர்சித்துள்ள தமிழ் எம்.பி

 இதேவேளை, பங்களாதேஷ் மத்திய வங்கியின் தலைவரும் நேற்று (10) பதவி விலகக் கோரி வங்கி அதிகாரிகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து அவர் பதவி விலகியுள்ளார்.எனினும் அவரது பதவி விலகல் நிராகரிக்கப்பட்டது.

இந்து சமூகத்தை குறிவைத்து தாக்குதல்

இத்தகைய பின்னணியில், மாணவர் போராட்டம் என்ற போர்வையில் பங்களாதேஷின் சிறுபான்மை இந்து சமூகத்தை குறிவைத்து தாக்குதல் சம்பவங்களும் நாட்டில் பதிவாகி வருகின்றன.

பங்களாதேஷில் மீண்டும் வெடித்தது போராட்டம் : வீதிக்கு இறங்கிய இந்துக்கள் | Hindu Community Of Bangladesh Has Started Protest

ஓகஸ்ட் 5 ஆம் திகதி ஹசீனாவின் அரசாங்கம் கவிழ்ந்த சில நாட்களில், நாட்டின் 52 மாவட்டங்களில் இந்து சமூகத்தை குறிவைத்து 200 க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளன.

இந்து சமூகத்தினர் மாபெரும் போராட்டம்

இந்தத் தாக்குதல்களில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளக் கோரி, தலைநகர் டாக்கா உட்பட பல பகுதிகளில் சிறுபான்மை இந்து சமூகத்தினர் மாபெரும் போராட்டங்களை நடத்தினர்.

பங்களாதேஷில் மீண்டும் வெடித்தது போராட்டம் : வீதிக்கு இறங்கிய இந்துக்கள் | Hindu Community Of Bangladesh Has Started Protest

 சிறுபான்மையினரைத் துன்புறுத்துபவர்களின் விசாரணையை விரைவுபடுத்த சிறப்பு நீதிமன்றம் மற்றும் சிறுபான்மையினருக்கு நாடாளுமன்றத்தில் 10 சதவீத இட ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட போராட்டங்களால் டாக்காவில் சாலைகள் கூட மூடப்பட்டன.

 இந்த போராட்டங்களில் 700,000 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாகவும், இதற்கு சில மாணவர் ஆர்வலர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகரித்துள்ள வறுமைக்கோடு : வெளியான அறிக்கை

இலங்கையில் அதிகரித்துள்ள வறுமைக்கோடு : வெளியான அறிக்கை

 வங்கதேசத்தின் 170 மில்லியன் மக்கள்தொகையில் 8 சதவீதம் இந்துக்கள் உள்ளனர், அரசியல் விமர்சகர்களின் கருத்துப்படி, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக்கை இவர்கள் ஆதரிக்கின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016