ஜனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பினார் ஹிருணிகா பிரேமச்சந்திர
மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமை நாட்டின் சட்டத்திற்கு அவமரியாதை என்று ஹிருணிகா பிரேமச்சந்திர ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
பௌத்த மதத்தின்படி, துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது, ஆனால் நாட்டின் தற்போதைய சட்டத்தை நிலைநிறுத்துவது ஆட்சியாளர்களின் பொறுப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகளின் தீர்ப்பை குப்பையில் எறிந்து இறுதி முடிவை எடுப்பவர் நீங்கள் என்றால், இந்த நாட்டின் சட்டம் என்ன?" என்று அவர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் எழுதியுள்ளார்.
ஜனாதிபதி ஒரு சிலரின் கைகளில் சிப்பாயாக மாறிவிட்டார் என்றும் குறிப்பிட்டார்.
துமிந்தா சில்வ அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றாலோ அல்லது அரசியலில் நுழைந்தாலோ ஆச்சரியப்பட மாட்டேன் என்றும், மக்கள் அநீதிகளை உடைக்கும் நாள் வெகு தொலைவில் இருக்காது என்றும் அவர் கூறுகிறார்.
ஹிருணிகாவின் தந்தையான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்ட வழப்பில் துமிந்த சில்வாவுக்கு கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.