இந்திய- பாகிஸ்தான் ரி 20 போட்டி : வரலாற்றில் இல்லாத பாதுகாப்பு
ரி 20 உலகக் கோப்பை தொடரில் கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய(15) போட்டிக்கான பாதுகாப்புக்காக உளவுத்துறை அதிகாரிகள் உட்பட சுமார் 5,000 காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேற்கு மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த டிஐஜி சஜீவ மெதவத்த இன்று (15) காலை காவல்துறை ஊடகப் பிரிவில் கூட்டப்பட்ட சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
பெரியளவிலான பாதுகாப்பு
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டிதான் பாதுகாப்புக்காக அதிக எண்ணிக்கையிலான அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ள போட்டி என்று மூத்த டிஐஜி கூறினார்.மேலும், இந்தப் போட்டியின் பாதுகாப்பிற்காக முப்படைகளின் ஆதரவும் பெறப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில், முறையான அனுமதியின்றி இன்றிரவு (15) போட்டியில் கலந்து கொள்வதைத் தவிர்க்குமாறு ரசிகர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ரசிகர்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை
இந்தப் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகக் கூறிய மூத்த டிஐஜி, இன்று டிக்கெட்டுகளைப் பெற பலர் மைதானத்திற்கு வருவார்கள் என்று கூறினார்.

எனவே, பார்வையாளர்கள் முறையான அனுமதி இல்லாமல் மைதானத்திற்கு வந்து சிரமத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போர்க்காலத்தின் தகவல் பரிமாற்ற ஊடகமாக விளங்கிய வானொலி 8 மணி நேரம் முன்