வீடுகளுக்குள் புகுந்து சூறையாடிய பயங்கரவாதிகள்! ஒரே இரவில் 80 பேர் கொடூர கொலை
Hous
Infiltrate
Terrorists
By Vasanth
நைஜீரிய நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதல்களில் 80 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளும் தாக்குதல்களினால் அந்நாட்டில் குழப்ப நிலை நீடித்துக் கொண்டிருக்கிறது. தில்லாபுரி பிராந்தியத்தில் உள்ள சோம்பாங்கவ் என்ற கிராமத்துக்குள் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த வீடுகளை சூறையாடியுள்ளனர்.
பின்னர் அவர்கள் வீடுகளுக்குள் இருந்த நபர்களை தரதரவென வெளியே இழுத்து வந்து துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொடூரமாக கொலை செய்தனர்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி