பயணிகள் விமானத்தில் திடீரென பரவிய தீ - அமெரிக்காவை அதிர வைக்கும் விமான விபத்துக்கள்
அமெரிக்காவின் புறப்படத் தயாரான நிலையில் இருந்த யுனைடெட் எயார்லைன்ஸ் விமானத்தில் தீப்பிடித்த காணொளி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு வார காலத்திற்குள் அமெரிக்காவில் இரண்டு விமான விபத்துகள் இடம்பெற்ற நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் தெரியவருகையில், ஹூஸ்டன் நகரில் இருந்து நியூயார்க் நகருக்கு ஜோர்ஜ் புஷ் இன்டர்கான்டினென்டல் விமான நிலையத்திலிருந்து தீ பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலைய மீட்பு தீயணைப்பு வீரர்கள்
விமானம் புறப்படத் தயாரான போது அதன் இறக்கைகளில் ஒன்றில் இருந்து தீப்பிழம்புகள் வெளியேறின. இதையடுத்து விமானம் தொடர்ந்து பயணத்தை மேற்கொள்வது இரத்துச் செய்யப்பட்டது.
குறித்த விமானத்தில் 104 பயணிகள் மற்றும் 5 பணியாளர்களும் பயணம் செய்ய இருந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஹூஸ்டன் தீயணைப்புத் துறை தனது எக்ஸ் தள பதிவில், "விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாரான விமானம் ஓடுபாதையிலிருந்து வெளியேறுவதற்கு முன் பிரச்சினை ஏற்பட்டதாகத் தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து , ஹூஸ்டன் தீயணைப்புத் துறையின் விமான நிலைய மீட்பு தீயணைப்பு வீரர்கள் களத்திற்கு விரைந்து சென்று, விமானத்தில் இருந்தவர்களை உடனடியாக வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்று தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |