ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கியது ஹவுதி! வெளியானது அறிவிப்பு
ஈரான் ஆதரவு பெற்ற யேமன் ஹவுதி கிளர்ச்சிக் குழு இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளது.
இது ஈரானுக்கு எதிராக நடந்து வரும் பிராந்திய மோதலில் ஹவுதிகள் நேரடியாக ஈடுபட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.
ஹவுதி இயக்கம் வெளியிட்ட அறிக்கையில், “தெற்கு ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனில் உள்ள முக்கியமான இஸ்ரேல் இராணுவ தளங்களை இலக்காகக் கொண்டு பல பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் முதல் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
பதிலடி
இதற்கு முன்னர், இஸ்ரேல் பாதுகாப்பு படை யேமனிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணை ஒன்று ஏவப்பட்டதை கண்டறிந்ததாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், மேற்படி தாக்குதல் லெபனான், ஈரான், ஈராக் மற்றும் பாலஸ்தீன் ஆகிய நாடுகளில் நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான பதிலடி என ஹவுதி அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களை அதிகரித்தால், ஈரானுக்கு ஆதரவாக போரில் இணைவதற்கு தயாராக உள்ளதாக ஹவுதிகள் முன்பே எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |