அமெரிக்க - இஸ்ரேல் போரில் ஈரானுடன் இணையப்போகும் ஹவுதிகள்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் சேருமாறு யேமனின் ஹவுதிகள் மீது ஈரானும் ஹிஸ்புல்லாவும் அழுத்தத்தை அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈத் அல்-ஃபித்ர் பண்டிகை முடிந்த பிறகு அக்குழு மோதலில் நுழையக்கூடும் என்றும் பிராந்திய பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய பொது ஒளிபரப்பு நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஹவுதிகளை எதிர்க்கும் படைகளுக்குள் இருக்கும் வட்டாரங்கள் வெளியிட்ட கருத்தின் படி,
அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல்
“அக்குழு சமீபத்தில் அல்-ஹுதைதா துறைமுக நகரில் தனது இருப்பை வலுப்படுத்தியதாகவும், இது திங்கட்கிழமை அன்றே போரில் இறங்குவதற்கான தயாரிப்புகளின் அறிகுறியாக இருக்கலாம் என்றும் தெரிவித்தன.

அந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.
ஹவுதி தலைவர் அப்துல்-மாலிக் அல்-ஹவுதி, பிராந்தியத்தில் ஏற்படும் நிகழ்வுகளுக்கு இராணுவ ரீதியாக பதிலடி கொடுக்க தங்கள் குழு தயாராக இருப்பதாக முன்னதாகக் கூறியிருந்தார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இராணுவ மட்டத்தில் அனைத்து வழிகளும் சாத்தியமே என்று அறிவித்ததோடு, ஈரான், லெபனான் மற்றும் பாலஸ்தீனத்திற்கு தனது ஆதரவையும் உறுதிப்படுத்தினார்.
இராணுவ நடவடிக்கை
ஈரானின் செயல்திட்டங்களுக்குச் சேவை செய்யும் வகையில் இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு எதிராக ஹவுதிகளை யேமன் பிரதமர் ஷாயி அல்-ஜிந்தானி எச்சரித்துள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலியத் தாக்குதல்கள் பெப்ரவரி 28 அன்று தொடங்கின. இதில், அப்போதைய உச்ச தலைவர் அலி கமேனி உட்பட 1,300 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இஸ்ரேல், ஜோர்தான், ஈராக் மற்றும் அமெரிக்க இராணுவ சொத்துக்களைக் கொண்டுள்ள வளைகுடா நாடுகளைக் குறிவைத்து, தெஹ்ரான் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |