கோர முகத்தை காட்டும் இஸ்ரேல்: கப்பல்களை தாக்குவோம் – எச்சரிக்கும் ஹவுதி
இஸ்ரேல் (Israel) துறைமுகங்களுடன் தொடர்பு வைத்துள்ள நிறுவனங்களுக்குச் சொந்தமான அனைத்து கப்பல்களையும் தாக்குவோம் என ஹவுதி (Houthis) கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கப்பல்கள் தாக்கப்படாமல் இருக்க வேண்டுமெனில், காஸாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு எதிராக உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
காஸாவில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் நிறுத்திக் கொண்டால், உடனடியாக தங்கள் நடவடிக்கையை நிறுத்திக் கொள்வோம் என ஹவுதி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
தீவிரமான எச்சரிக்கைகள்
இதேவேளை, காஸாவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் பல நாட்களாக உணவின்றி, பட்டினியில் தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு உதவித் திட்டம் எச்சரித்துள்ளது.
உலக உணவுத் திட்டம் (WFP) வெளியிட்ட அறிக்கையில், "ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருகிறது.
90,000 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம், காஸாவில் பஞ்சம் குறித்து தீவிரமான எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை, மேலும் ஒன்பது பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்ததாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
