போராட்டக்காரர்களை கைது செய்த காவல்துறையினரை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பு!
போராட்டக்காரர்களை கைது செய்த காவல்துறை அதிகாரிகளை விசாரணைக்கு அழைக்கவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் நேறறு பிற்பகல் ஆர்ப்பாட்டக்காரர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாடாளுமன்ற நுழைவு வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரையே காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில், இது குறித்து தெரிவித்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, குடிமகனின் அடிப்படை உரிமையான பேச்சு மற்றும் கருத்துரிமைக்கு மதிப்பளிக்குமாறும் அமைதியான போராட்டங்களை நசுக்க மாட்டோம் என்பதை உறுதிப்படுத்துமாறும் காவல்துறையினருக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
இதேவேளை, 14(1) (அ) பிரிவின் கீழ், நாடாளுமன்ற உறுப்பினர்களை விமர்சிப்பது பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை அனுமதிக்கக்கூடியது என்று அனைத்து காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் ஐஜிபி உரிய வழிகாட்டுதல்களையும் அறிவுறுத்தல்களையும் வழங்க வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.




