குற்றமற்றவள் என நிரூபித்து காட்டு... மனைவியை தீக்குளிக்க வைத்த கணவன்!

Sri Lanka Police Batticaloa Sri Lanka Police Investigation Fire
By Bavan Jan 18, 2026 06:25 AM GMT
Report

"நீ குற்றமற்றவள் என நிரூபித்துக் காட்டு" எனக் கூறி, மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீப்பெட்டியைக் கொடுத்து அவரைத் தீக்குளிக்கச் செய்த கணவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு - முனைக்காடு பகுதியில் நேற்று (17) காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் கொக்கட்டிச்சோலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், முனைக்காடு நாகதம்பிரான் கோவில் வீதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான 36 வயதுடைய தி. அனுஷ்வரன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்

அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

குறித்த நபர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான பிரகலாதேவி என்பவரைத் திருமணம் முடித்து வாழ்ந்து வரும் நிலையில் சம்பவ தினத்தன்று காலை  கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

குற்றமற்றவள் என நிரூபித்து காட்டு... மனைவியை தீக்குளிக்க வைத்த கணவன்! | Husband Arrested For Setting Wife On Fire

இதன்போது வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில், கணவன் மனைவியின் நடத்தையில் சந்தேகமுற்று, "நீ குற்றமற்றவள் என்பதை நிரூபித்துக் காட்டு" என வற்புறுத்தியுள்ளார்.

அதன்பின்னர் மனைவியின் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி, தீப்பெட்டியைக் கொடுத்து அவரே தீ வைக்கத் தூண்டியுள்ளார்.

இதனால் தீப்பற்றி எரிந்த மனைவி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாடப்புத்தக விநியோகம் குறித்து கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

பாடப்புத்தக விநியோகம் குறித்து கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

நீதவான் முன்னிலையில் நிறுத்துதல்

மனைவியைத் தீக்குளிக்க வைத்த பின்னர், கணவன் தனக்குத் தானே கூரிய ஆயுதத்தால் குத்தி காயப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குற்றமற்றவள் என நிரூபித்து காட்டு... மனைவியை தீக்குளிக்க வைத்த கணவன்! | Husband Arrested For Setting Wife On Fire

இதனையடுத்து, மனைவியைக் கொலை செய்ய முயன்றமை மற்றும் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கொக்கட்டிச்சோலை காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (18) நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பாகக் கொக்கட்டிச்சோலை குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சாரதி அனுமதிப் பத்திரங்கள் குறித்து வெளியான தகவல்

சாரதி அனுமதிப் பத்திரங்கள் குறித்து வெளியான தகவல்



  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்