மீண்டும் செயலூக்கம் பெறும் தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி - கட்சித் தலைமையுடன் முக்கிய பேச்சு
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஒன்றுகூடாது உறங்கிக் கிடந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி, நேற்றைய தினம் (19) கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவின் அறிவுறுத்தலுக்கு அமைய கட்சி அலுவலகத்தில் ஒன்றுகூடியது.
பலதரப்பட்ட பிரச்சினைகளால் பிரிந்து நின்ற அனைவரையும் நேற்றைய தினம் கட்சி அலுவலகத்தில் ஒன்று கூட்டிய கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இக்கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியின் பொதுச் செயலாளர், யாழ். மாவட்ட மகளிர் அணியின் உறுப்பினர்கள், கிளிநொச்சி மாவட்ட மகளிர் அணியின் உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.
தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியின் பொதுச் செயலாளர், கிளிநொச்சி மாவட்ட மகளிர் அணித் தலைவி - செயலாளர் மற்றும் யாழ். மாவட்ட மகளிர் அணித் தலைவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்களோடு கடந்த பொதுத் தேர்தலில் பெண் வேட்பாளராக களமிறங்கிய சசிகலா ரவிராஜூம் கலந்துகொண்டிருந்தார்.
கூட்டத்தில் பலதரப்பட்ட விடயங்களை பேசிய மகளிர் அணியினர் கடந்தகால பேதங்களை மறந்து கட்சித் தலைமைக்கு கட்டுப்பட்டு ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.