உயர்வான பணிகளால் ஊரவர் உள்ளங்களில் நிறைந்த அன்னை கந்தையாஇராசம்மா
யாழ்ப்பாணம் காரைநகரிலிருந்து இலங்கை ஒலிபரப்புத் துறைக்கு ஓர் உன்னதமான அறிவிப்பாளரைத் தந்த அன்னை திருமதி.கந்தையா இராசம்மா அவர்கள் 2021 மே 25ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை இயற்கை எய்தியுள்ளார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம்.
அன்னையாக விளங்கி தமது பெற்றெடுத்த செல்வங்களுக்கு ஆற்றவேண்டிய பணிகள் அனைத்தையும் மிக நிறைவாகப் புரிந்தவர் அன்னை இராசம்மா அவர்கள்.
குடும்பத்தின் மூத்தவராகப் பிறந்த இவர் தமது சகோதரர்களுக்கு ஓர் அன்னையின்நிலையில் இருந்து அத்தனை பணிகளையும் செய்துள்ளார். அதுமட்டுமல்ல ஊரவர் எல்லோருக்கும் உறுதுணையாக விளங்கியுள்ளார்.
இராசம்மா அவர்களின் மகிழ்வின் உச்சம் என்றால் அது மற்றவர்களுக்கு உதவிகள் வழங்குவது. இதில் சொந்த பந்தங்களை மட்டுமல்லாது ஊரையே மகிழ்வித்த ஓர் உயர்ந்த உள்ளம் கொண்ட அன்னை.
எப்பொழுதும் சிரித்த முகத்துடன் திகழ்வார். அதனால் இவரை நாடி வருவோர் எவ்வித தயக்கமும் இன்றி உரையாடி மகிழ்வர். ஊரே அழுது புலப்பும் அளவுக்கு அன்னையின் சேவைகள் உயர்ந்து நிற்கின்றன. 93 வயது வரை வாழ்ந்து நிறைவு கண்டுள்ளார்.
பெற்றெடுத்த ஒவ்வொருவர் வளர்ச்சியையும் கண்டு மகிழ்ந்துள்ளார். இலங்கை ஒலிபரப்புத் துறைக்கு ஓர் அருமையான அறிவிப்பாளராக கே.சிவசோதி(இளையபாரதி) வளர்வதற்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்கிய அன்னை. இலங்கை வானொலியில் தன் மகன் சிவசோதியின் குரல் கேட்டு மகிழ்ந்துவாழ்ந்தார். கே.சிவசோதி (இளையபாரதி) புலம் பெயர்ந்து கனடாவில் வாழும் காலத்தில் அவரது வர்த்தகத் துறை வளர்ச்சிக்கும், தொடர்ந்து கனேடிய தமிழ்ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் உருவாக்கத்துக்கும் செயற்பாடுகளுக்கும் உந்துசக்தியாக விளங்கியவர்.
சோதியின் வானொலிக் கீர்த்தியை கேட்டு மகிழ்ந்தவர். கனடாவில் தமது பெற்றெடுத்த செல்வங்களோடு வாழ்ந்து வந்த பொழுதிலும், தாயகத்தில் குறிப்பாக சுன்னாகம் இல்லத்தில் வாழ்வதையே பெரிதும் விரும்பியவர்அங்கேயே உறக்கத்தின் போதே இயற்கை எய்தியுள்ளார்.
அன்னையின் இழப்பு ஆற்றிட முடியாதது. அவரை இழந்து தவிக்கும் உறவுகளின் துயரத்தில் நாமும் பங்கெடுத்துக்கொள்கிறோம்.
-IBC-தமிழ் குழுமம். --
https://ripbook.com/kandiah-rasamma-60acb8714623b/notice/obituary-60acb8b9770a1