கொழும்பிலிருந்து சென்ற தொடருந்தில் மீட்கப்பட்ட பயங்கர பொருட்கள்
கொழும்பிலிருந்து மட்டக்களப்பைச் சென்றடைந்த தொடருந்திலிருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (19) மாலை 4:10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தொடருந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குறித்த பையைத் திறந்து பரிசோதித்த போது, அதில் 252 பெக்கெட்டுகளில் பொதி செய்யப்பட்ட 200 கிராம் ‘ஜஸ்’ வகை போதைப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டது.
மேலதிக விசாரணை
இதனையடுத்து, மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், பையை மீட்டு, அதிலிருந்த போதைப் பொருளை கைப்பற்றினர்.
இந்தப் போதைப்பொருளை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
