பருத்தித்துறை நகர சபை தவிசாளரின் தன்னிச்சையான முடிவு!
பருத்தித்துறை பிரதேச சபையில் சட்டத்திற்கு முரணாக வீதியொன்று அமைக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பருத்தித்துறை பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட தம்பசிட்டி பிரதான வீதியில் இருந்து குறுக்காக செல்லும் பதிவு செய்யப்படாத வீதி ஒன்றே இவ்வாறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது.
இந்த வீதி பருத்தித்துறை நகர சபையின் தவிசாளரின் தன்னிச்சையான முடிவின் அடிப்படையில் பருத்தித்துறை நகர சபை உறுப்பினர்களுக்கு தெரியாமல் தவிசாளரின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரசபை
சட்டத்திற்கு முரணாகவும் பருத்தித்துறை பிரதேச சபையின் எந்தவித அனுமதியும் இல்லாமலும் 22 மீட்டர் கொங்கிறீட் வீதி பருத்தித்துறை நகரசபையின் தவிசாளரின் அனுமதிக்கமைவாக போடப்பட்டுள்ளது.

இந்த சம்பவமானது உள்ளூராட்சி சட்டவரம்பை மீறியே அமைக்கப்பட்டுள்ளது எனவும் இதனால் பருத்தித்துறை நகர சபை எல்லைக்குள் உட்பட்ட மக்களின் பணம் வீனாக பயண்படுத்தபட்டுள்ளதாகவும் மக்கள் விசணம் தெரிவித்துள்ளனர்.
இதனால் அயலில் வசிக்கும் வீடுகளுக்கு மழை காலங்களில் வெள்ள நீரோட்டங்கள் வருவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றதோடு குறித்த இடத்தில் வாழும் மக்கள் எதிர் காலத்தில் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

