யாழில் "கொரியர்" சேவையூடாக போதைப்பொருள் விற்பனை - அதிர்ச்சியில் மக்கள்
யாழ்ப்பாணம் பகுதியில் மிக நூதனமான முறையில் போதைப்பொருள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - சிவன்கோயிலை அண்மித்த பகுதியில் நேற்று (28.05.2026) இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது
இதன்போது அவரிடமிருந்து 1800 போதை மாத்திரைகளை யாழ்ப்பாணம் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
போதைப்பொருள் விற்பனை
இணைய சேவையின் ஊடாக பொதிகள் விநியோகிக்கப்படுவதாக கூறி போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

இதையடுத்து பொதி விநியோக சேவையின் ஊடாக கொழும்பில் இருந்து பொதிசெய்யப்பட்டு யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருக்கும் தபால் நிலையம் ஒன்றுக்கு கிடைக்கப்பெற்ற சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்றை காவல்துறையினர் சோதனைக்கு உட்படுத்தினர்.
அதில் 1800 போதை மாத்திரைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த போதை மாத்திரைகளை கொள்வனவு செய்ததாக கூறப்படும் நபர் ஒருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |