இன்று இலங்கை வரும் IMF பணியாளர்கள் குழு
சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் இன்று (24) இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பிரதிநிதிகள் குழு நாட்டில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தங்கியிருக்குமென சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்பாட்டுப் பிரதானி இவான் பபஜோர்ஜு (Evan Papageorgiou) தெரிவித்துள்ளார்.
இந்த உத்தியோகப்பூர்வ பயணத்தின் போது, நாட்டின் அண்மையக்கால பொருளாதார நிலைமைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார மறுசீரமைப்பு
இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் செயல்திறன் மீளாய்வு நடவடிக்கைகளை நோக்கமாக கொண்டே இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதிக்கான ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளை நிறைவு செய்து, அதற்கான அனுமதியை நாணய நிதியத்தின் நிர்வாகச் சபை கடந்த மே மாதம் 27 ஆம் திகதி வழங்கியிருந்தது.
இதற்கமைய, இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதற்காக 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி இலங்கைக்குக் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 7 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்