ரணில் அரசுக்கு விழுந்த பலத்த அடி! சர்வதேசத்திலிருந்து அடுத்தடுத்து வந்த அதிர்ச்சி தகவல்

International Monetary Fund Manusha Nanayakkara Ranil Wickremesinghe Sri Lankan protests Galle Face Riots
By Kanna Jul 25, 2022 06:56 PM GMT
Report

அமைதியான போராட்டங்கள் வன்முறையாக மாறியமையால் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் பின்தள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், "எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன் கைச்சாத்திடப்படவிருந்த பணியாளர் மட்ட உடன்படிக்கை பின்தள்ளப்பட்டுள்ளது.

அமைதியான போராட்டங்கள்,வன்முறையாக மாறியமையே இந்த தாமதத்துக்கான காரணம்.

போராட்டங்கள் காரணமாக, கடந்த வாரம் இலங்கைக்கு பயணம் செய்யவிருந்த உலக உணவு திட்டத்தின் தலைவர், தனது பயணத்தை ஒரு மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளார்.

இலங்கையில் போராட்டங்கள் வன்முறையாக மாறியதன் காரணமாக, கிளர்ச்சியாளர்களை விரும்பாத நிலையில், இலங்கையர்களுக்கு கிடைக்கவேண்டிய தொழில்வாய்ப்புக்கள் கிடைக்காமல் போயுள்ளன, அவை ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

காலி முகத்திடலில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை

ரணில் அரசுக்கு விழுந்த பலத்த அடி! சர்வதேசத்திலிருந்து அடுத்தடுத்து வந்த அதிர்ச்சி தகவல் | Imf Help Lanka Ranil Goverment Sri Lanka Protest

இலங்கையின் அதிபர் செயலகத்திற்கு முன்னால் கோட்டா கோ கம போராட்டக்களம் அமைத்து நூறு நாட்களுக்கும் மேலாக போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இவ்வாறான நிலையிலேயே கடந்த 9 ஆம் திகதி பாரிய மக்கள் எழுச்சி ஏற்பட்டு கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியதோடு, அதிபர் பதவியிலிருந்தும் விலகினார்.

இந்நிலையில், இலங்கையின் அதிபராக ரணில் விக்ரமசிங்க கடந்த 21 ஆம் திகதி பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற 12 மணித்தியாலத்துக்குள் கோட்டா கோ கம போராட்டக்களம் அடித்து தகர்க்கப்பட்டது. போராட்ட ஒருங்கிணைப்பாளர்களும் பலர் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை, குறித்த பகுதியில் இருந்த சில வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் உள்நாட்டு ஊடகவியலாளர்கள் பொதுமக்கள் மற்றும் பெண்கள் என்று அனைவர் மீதும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

அத்துடன் அதிபர் செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முப்படையினரின் இக் கொடூர சம்பவத்தால் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேசத்தில் இருந்து கண்டனங்களும் அழுத்தங்களும் எழுந்தன.

இந்நிலையில், காலிமுகத்திடலில் நடந்தேறிய இச் சம்பவத்ததை எதிர்த்து உடனடியாக தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தார் அமெரிக்க தூதுவர்.

இதேவேளை, இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்தால் ஜப்பான் தனது அனைத்து உதவிகளையும் வழங்காமல் நிறுத்தும் என்று அதிபர் ரணிலிடம் நேரடியாக அதன் தூதுவர் பகிரங்கமாக எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி இலங்கைக்கு கிடைப்பது கடினம் என ஜோன் ஹெப்ஹின்ஸ் பல்கலைகழக பேராசிரியரும் அரசியல் ஆய்வாளருமான டெபோரா பிராவுட்டிகம் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், தேவிபுரம்

21 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, பிரான்ஸ், France

24 Aug, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், London, United Kingdom

03 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, Toronto, Canada

15 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Wembley, United Kingdom

22 Aug, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Vitry-sur-Seine, France

12 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Atchuvely, Montreal, Canada, கொழும்பு, Hatton

20 Aug, 2010
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, உடுவில், Bochum, Germany, Scarborough, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021