இலங்கைக்கு அமெரிக்கா வழங்கியுள்ள ஆலோசனை
சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்னர் இலங்கை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா கருத்துக்களை முன்வைத்துள்ளது.
அந்த வகையில் இலங்கை மத்திய வங்கி, சுயாதீனமான செயற்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரங்களுக்கான குழு தனது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளது.
Any @IMFNews agreement with #SriLanka must be contingent on @CBSL independence, strong anti-corruption measures & promotion of the rule of law. Without these critical reforms, Sri Lanka could suffer further economic mismanagement & uncontrollable debt. https://t.co/oMdT7QIwZP
— Senate Foreign Relations Committee (@SFRCdems) July 1, 2022
அத்துடன் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கும், நாட்டில் மோசடி மற்றும் ஊழலை ஒழிப்பதற்கும் ஒரு வேலைத்திட்டத்தை முதலில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால், இலங்கை மேலும் பொருளாதார முறைகேடு மற்றும் கட்டுப்படுத்த முடியாத கடன் நிலைமையை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரங்களுக்கான குழுவின் டுவிட்டர் பதிவில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.