அரச ஊழியர்களின் வேலை நாட்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள முக்கிய தீர்மானம்!
அரச ஊழியர்கள் 5 நாட்களும் பணிக்கு சமூகமளிப்பது அவசிமற்றதென வெகுவிரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் மகிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக உணவு பற்றாக்குறை தொடர்பில் பல்வேறு தரப்பினர் எதிர்வு கூறியுள்ளார்கள், இச்சவாலை வெற்றிக்கொள்ள அரசாங்கம் சிறந்த திட்டங்களை வகுத்துள்ளதாகவும் அவர் குறிப்டபிட்டுள்ளார்.
விவசாயத்துறை பாதிப்பு
அவற்றை விரைவாக செயற்படுத்த தீர்மானித்துள்ளது. பல்வேறு காரணிகளினால் தேசிய விவசாயத்துறை பாதிக்கப்பட்டுள்ளது.
அரச காரியாலயங்களை சூழவுள்ள காணிகளில் மேலதிக பயிர்ச்செய்கையில் ஈடுப்படுமாறு சகல அரச ஊழியர்களிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள விசாலமான அரச மற்றும் தனியார் காணிகளில் தற்காலிகமாக மேலதிக பயிர்ச்செய்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு
அரச சேவையாளர்கள் 5 நாட்களும் சேவைக்கு சமூகமளிப்பது அவசியமற்றது என விரைவில் அறிவிக்கப்படும்.
ஆகவே அரச சேவையாளர்கள் மேலதிகமாக உள்ள நேரத்தை பயனுடையதாக்கும் வகையில் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
