மின் பாவனையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
notice
important
Gamini Lokuge
By Vanan
நிலுவைத் தொகையை செலுத்த மின் பாவனையாளர்களுக்கு ஒரு வருட சலுகை காலத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் காமினி லோகுகே(Gamini Lokuge) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (07) வாய்வழி கேள்விகளுக்கு பதில் வழங்கிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் பதில் வழங்கிய அவர்,
இந்த இரண்டு மாதங்களுக்கு நிலுவையில் உள்ள 44 பில்லியன் ரூபாவை நாங்கள் அறவிட வேண்டியுள்ளது.
எனினும், நிலுவை தொகையை செலுத்தவுள்ள பாவனையாளர்களுக்கு அதனை 12 மாதங்களில் செலுத்த வாய்ப்பளித்துள்ளோம். ஆனால் அந்த மாதத்திற்கான கட்டணத்துடன் அதனை செலுத்த வேண்டும் என்றார்.