நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை: நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி,கிங்கங்கை, களுகங்கை மற்றும் நில்வள கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
மேலும், மழை பெய்தால் அந்த கங்கைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த கங்கைகளுக்கு அருகில் வசிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சீரற்ற காலநிலை
அதேநேரம், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கெனியோன் நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகள் நேற்று (30) திறக்கப்பட்டுள்ளது.
விமலசுரேந்திர, காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர், நிரம்பி வழியும் மட்டத்தை எட்டியுள்ளதாக அந்த நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |