இலங்கையில் அதிகரித்த சிறுவர் துஷ்பிரயோகம் : கடும் நடவடிக்கைக்கு உத்தரவு

Sri Lanka Child Abuse Geetha Kumarasinghe
By Vanan Oct 25, 2023 04:11 PM GMT
Report

இலங்கையில் இந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் வரையான காலப் பகுதிக்குள் 16 வயதுக்குட்பட்ட 168 சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(25) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள இராஜாங்க அமைச்சர், துஷ்பிரயோகங்களுக்கு உள்ளான 22 சிறுமிகள் தாய்மை அடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

கடுமையான நடவடிக்கை

இலங்கையில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு காவல்துறையினரை இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க கோரியுள்ளார்.

இலங்கையின் கடன் வழங்குநர்கள் தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு : ஜுலி சங் அறிவிப்பு

இலங்கையின் கடன் வழங்குநர்கள் தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு : ஜுலி சங் அறிவிப்பு

இலங்கையில் அதிகரித்த சிறுவர் துஷ்பிரயோகம் : கடும் நடவடிக்கைக்கு உத்தரவு | Increased Child Abuse In Sri Lanka

இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பெற்றோர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும், இதுபோன்ற துஷ்பிரயோகங்களுக்கு இரையாகாமல் தமது குழந்தைகளைப் பாதுகாக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், குழந்தைகள் பெரும்பாலும் நெருங்கிய குடும்ப உறுப்பினர் அல்லது அவர்களது சொந்த வீட்டில் உள்ள ஒருவரால் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தமிழர்களை வெட்டுவேன் : எச்சரிக்கும் இனவாத தேரர் (காணொளி)

தமிழர்களை வெட்டுவேன் : எச்சரிக்கும் இனவாத தேரர் (காணொளி)

அதிகரித்து வரும் இந்தப் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்கள் அதிபருடன் நடத்தப்படவுள்ள நிலையில், பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

காவல்துறையினரின் அலட்சியமும் இவ்வாறான சம்பவங்கள் அதிகரிப்பதற்கு ஒரு காரணம் எனக் கூறியுள்ள கீதா குமாரசிங்க, போதைப் பொருட்களின் அதிகரித்த பாவனையும் இவ்வாறான குற்றங்கள் இடம்பெறுவதற்கு ஒரு காரணமாக அமைவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் என்ற ரீதியில் தாம் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பிற்கு பொறுப்புக்கூறும் அதே வேளையில், இலங்கையின் ஒட்டுமொத்த சமூகமும் அத்தகைய பொறுப்பை ஏற்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்