பாகிஸ்தானில் அதிகரித்த பயங்கரவாதத் தாக்குதல்கள்

Pakistan
By Sathangani Sep 04, 2023 05:04 AM GMT
Sathangani

Sathangani

in உலகம்
Report

பாகிஸ்தானின் வடமேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் தாக்குதல்களால் பாகிஸ்தானின் உள்நாட்டு பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தானின் பிரபல சிந்தனை அமைப்பு வெளியிட்ட மாதாந்திர தரவுகளின் அடிப்படையில் இது தெரிய வந்துள்ளது.

இஸ்லாமாபாத் நகரைத் தளமாகக் கொண்டு செயற்படும் “பாகிஸ்தான் மோதல் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிறுவனம் (பிஐசிஎஸ்எஸ்)“ வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் 99 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 4 தற்கொலைத் தாக்குதல்களும் அடங்குகின்றது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி : பங்களாதேஷ் 89 ஓட்டங்களால் வெற்றி

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி : பங்களாதேஷ் 89 ஓட்டங்களால் வெற்றி


112 பேர் உயிரிழப்பு

இதேவேளை கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பா் மாதத்துக்குப் பிறகு அதிகபட்ச எண்ணிக்கையிலான தாக்குதல்கள் ஓகஸ்ட் மாதத்திலே நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.ஆனால், பாகிஸ்தான் தலிபான் எனப்படும் “தெஹ்ரீக்-ஏ-தலிபான்(டிடிபி)“ எனும் பயங்கரவாத அமைப்பு நடத்தியதாகக் கூறிய 147 தாக்குதல்களைவிட இந்த எண்ணிக்கை குறைவாகும்.

பாகிஸ்தானில் அதிகரித்த பயங்கரவாதத் தாக்குதல்கள் | Increased Terrorist Attacks In Pakistan

இந்தத் தாக்குதல்களில் சிக்கி பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினா் உட்பட  மொத்தம் 112 போ் உயிரிழந்ததுடன் மேலும், 87 போ் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜூலை மாதத்தில், 54 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்ற நிலையில், 83 சதவீதம் அதிகமான பயங்கரவாதத் தாக்குதல்கள் ஓகஸ்ட் மாதத்தில் நடந்துள்ளன. இதில் பலூசிஸ்தான் மற்றும் கைபா்பக்துன்கவா உள்ளிட்ட பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

51 சதவீதம் அதிகரிப்பு

பாகிஸ்தானின்  கிழக்கு பகுதிகளான பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் தாக்குதல்கள் குறைவாக இருந்ததால் அங்கு பரவலாக அமைதி நிலவியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் அதிகரித்த பயங்கரவாதத் தாக்குதல்கள் | Increased Terrorist Attacks In Pakistan

இதேவேளை இராணுவ வீரா்களின் உயிரிழப்பும் கடந்த மாதத்தில் 51 சதவீதம் அதிகரித்துள்ளதுடன் பாதுகாப்புப் படையினரின் பதில் நடவடிக்கைகளில் 24 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதுடன்  69 போ் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025