சீனாவில் கடும் கட்டுப்பாடு! உணவுக்கு ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடி - பட்டினியின் விளிம்பில் மக்கள்
சீனாவில் கடந்த 20 மாதங்களில் இல்லாத அளவு கொரோனா பாதிப்பு தற்போது இருந்து வருகிறது. இதனால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் சீனாவின் ஷான்சி மாகாணத்தின் தலைநகரான சியான் உட்பட பல நகரங்களில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
3 நாட்களுக்கு ஒருமுறை வீட்டுக்கு ஒருவர் வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பதால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். உணவு பொருட்களும் சரியான முறையில் கிடைக்காததால் அவர்கள் தவிர்த்து வருகிறார்கள்.
இது தொடர்பில் சியான் நகரவாசி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நான் சுற்றுமதில் வீட்டில் வசித்து வருகிறேன். அவசரத்துக்கு கூட நூடில்ஸ் கிடைக்கவில்லை. இப்படியே இருந்தால் பட்டினி கிடந்து சாக வேண்டியது தான் என்று தெரிவித்துள்ளார்.
இதே போல் இந்த நகரத்தைச் சேர்ந்த பொது மக்களும் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
உலகை அச்சுறுத்தும் கொரோனா முதல் முறையாக சீனாவில் வுஹான் நகரில் கண்டறியப்பட்டது. அதன்பிறகு உலகம் முழுவதும் இந்த நோய் வேகமாக பரவி பலரை காவு வாங்கியது. தற்போது உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரோன் பொதுமக்களை மீண்டும் பயமுறுத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.