சீரற்ற வானிலையால் கிழக்கில் நன்னீர் மீன்களுக்கான கேள்வி அதிகரிப்பு!
கிழக்கு மாகாணத்தில் நன்னீர் மீன்களுக்கான கேள்வி தற்போது அதிகரித்து வருகிறது.
அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்த நிலைமை காரணமாக மக்களின் மீன் பாவனைக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் கடல் சீற்றம் காரணமாக கடல் மீன்களின் விலையும் அதிகரித்துள்ளதால் நன்னீர் மீன்களுக்கான கேள்வி இவ்வாறு அதிகரித்துள்ளது.
வெள்ள நிலைமை
இதேவேளை, தற்போது வெள்ள நிலைமைகள் சீரடைந்துள்ள காரணத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் நன்னீர் கடற்றொழிலாளர்களுக்கான வருமானம் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது.

அதன்படி, இன்று (07.12.2025) படுவான்கரை பகுதியிலும் அதிக அளவிலான நன்னீர் கடற்றொழிலாளர்கள் அதிகமான நன்னீர் மீன்களை விற்பனை செய்வதனை காணக் கூடியதாக இருந்தது.
அதில் கோல்டன், கொளுத்தி, செத்தல், முண்டான், ஒட்டியான், சுங்கான், சள்ளல் போன்ற மீனினங்களை விற்பனை செய்வதை காணக்கூடியதாக இருந்தது.
ஒரு கிலோ மீன் 800 ரூபாய் தொடக்கம் 1000 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



